Thursday, 13 October 2016

தினம் ஒரு குறள்


குறள் அதிகாரம் : ஆள்வினை உடைமை


"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
  மெய்வருத்தக் கூலி தரும்"


குறள் விளக்கம் :
மு.வ : ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
சாலமன் பாப்பையா : விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

No comments:

Post a Comment